GD NAIDU

ஜி.டி.நாயுடு காலத்தை வென்ற மாமேதை- இந்தியா ஒதுக்கியதை ஜெர்மனி வணங்கியது! 
நம் நாட்டில் ஒரு நீண்டநால வழக்கம் உள்ளது. அதாவது உலக நாடுகள் பாராட்டிய பிறகுதான், சொந்த நாடு நம்மை அங்கீகரிக்கும். இந்த வழக்கத்திற்கு அப்போதே பலியானவர்தான் ஜி.டி.நாயுடு.
 
ஜி.யு.நாயுடு உழைப்பின் மேல் தன்னை உருவாக்கிக் கொண்ட இந்த நாடுதான், ஆரம்பத்தில் அவருக்கு ஒரு கார் தயாரிப்பதற்கான உரிமத்தை கூட வழங்கவில்லை. ஆனால் மெர்சிடிஸ் பென்ஸ் காரைத் தயாரித்த நாடு, இந்தியா வெட்கி தலைக்குனியும் அளவிற்கு அவருக்கு முக்கியத்துவத்தையும், மரியாதையையும் கொடுத்தது.
லைப்ஜிக் வர்த்தகக் கண்காட்சி
 
இருபதாம் நூற்றாண்டில் லைப்ஜிக் வர்த்தகக் கண்காட்சி மத்திய ஐரோப்பாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூடாரமாகத் திகழ்ந்தது. இது ஒட்டுமொத்த ஐரோப்பியக் கண்டத்தின் உற்பத்தியாளர்களும் தங்களின் சிறந்த தயாரிப்புகளை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தும் ஒரு தளமாக இருந்தது.
இந்த லைப்ஜிக் கண்காட்சியில்தான் ஜி.டி. நாயுடுவின் ‘ரசாண்ட்’ சவரக்கத்தி கவனிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டது. ஜெர்மனியின் துல்லியத்தன்மை மட்டுமே அளவுகோலாகக் கருதப்பட்ட அந்த கண்காட்சி அரங்கில், மெல்லிய – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, அதுவரை ஐரோப்பியர்கள் கேள்விப்பட்டிராத கோவை நகரத்தின் கரங்களால் செய்யப்பட்ட சவரக்கத்தி  பெரும் அங்கீகாரத்தைப் பெற்றது.
இக்கதை இப்போதும் தமிழ் பொறியியல் துறையில் வாழ்ந்து வருகிறது. இந்த வரலாற்று நிகழ்விற்கான முதன்மை ஆவணங்கள் விரைவில் இந்த  மைக்ரோசைட்டில் ஆதாரமாக வெளியிடப்படவுள்ளன. அது அந்த தயாரிப்புக்கான ஆண்டு, அதற்கான ஆதாரங்கள் மற்றும் பிரிவை (வகை) விவரிக்கும். அதனை படிக்கும்போது, அதே காலகட்டத்தில் நம் நாடு வழங்கிய அங்கீகாரங்களுடன் அதனை ஒப்பிட்டு, நாம் எதை தவறவிட்டுள்ளோம் என நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
 
“கோவைக்கு தெரிந்ததை இந்தியா செய்யவில்லை. லைப்ஜிக் செய்தது.”
 
ஜெர்மனியின் பொறியியல் கலாச்சாரம்
லைப்ஜிக் கண்காட்சி மட்டும் இந்த அங்கீகாரத்திற்கு காரணமல்ல. ஜெர்மனியுடனான ஜி.டி. நாயுடுவின் தொடர்பு இன்னும் ஆழமானதாக இருந்தது. ஜெர்மனி நாட்டு பொறியாளர்களையும்,  தொழிலதிபர்களையும் அவர் சந்தித்தார். அங்கு சென்றதோடு மட்டுமல்லாமல், அங்கிருந்து புதிய யுத்திகளைக் கொண்டுவந்து, பவேரியாவிடமிருந்து கோயம்புத்தூர் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இந்திய உற்பத்தியாளர்களுக்குக் காட்டினார்.
 
இக்கதை, இருபதாம் நூற்றாண்டின் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற ஜெர்மனி வாகன மற்றும் பொறியியல் பிராண்டுகளின் வளர்ச்சியுடனும், வெறும் கோட்பாடுகளை மட்டுமே பேசாமல், நடைமுறையில் பொருட்களை உருவாக்கிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ஜெர்மனி பொறியியல் கலாச்சாரம் வரலாற்று ரீதியாக அளித்து வந்த பரந்த மரியாதையுடனும் பின்னிப்பிணைந்துள்ளது.
 
ஜெர்மனி உற்பத்தியாளர்களுடன் நாயுடு நேரடியாக மேற்கொண்ட பரிமாற்றங்களின் முழுமையான விபரங்கள், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சர்வதேச ஆவணக் காப்பகம் மற்றும் இந்தியாவில் உள்ள சுயசரிதை ஆதாரங்களைக் கொண்டு திரட்டப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு மூலம் சரிபார்க்கப்படும் ஒவ்வொரு தகவலும் மைக்ரோசைட்டில் உடனுக்குடன் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும்.
 
இதில் விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று என்னவென்றால், இரு நாடுகளின் கலாச்சார முறை.  ஜெர்மனியர்களால் உடனடியாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலான ஒரு இந்தியப் பொறியியலாளராக நாயுடு திகழ்ந்தார். கைகளால் வேலை செய்வது, அளவீடுகளில் துல்லியம், ஆடம்பரமின்மை மற்றும் இயந்திரங்களை சுத்தமாகப் பராமரிப்பது போன்ற ஜெர்மனியப் பண்புகளை அவர் இயற்கையிலேயே கொண்டிருந்தார். அதாவது ஒரு ஜெர்மன் பட்டறையில், தனது சொந்த வீட்டில் இருப்பதுபோலவே இருந்தார்.
 
உரிமம் மறுத்த இந்தியா
 
ஆனால் 1952-இல், இந்த முரண்பாடு தாங்க முடியாததாக மாறியது. ஜி.டி. நாயுடுவின் நிறுவனம் இரண்டு இருக்கைகள் கொண்ட பெட்ரோல் காரை உருவாக்கியிருந்தது. கிடைக்கப்பட்ட தகவல்களின்படி, அந்த வாகனத்தின் விலை தற்போதைய மதிப்புக்கு ரூ.2 ஆயிரம் ஆகும். அது ஓடக்கூடிய தகுதியுடன் உருவாக்கப்பட்ட முதல் கார் மாடல் ஆகும். மேலும் இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.
 
மாருதி கார் இந்தியர்களின் போக்குவரத்து அடையாளமாக உருவெடுப்பதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பும், டாடா மோட்டார்ஸ் தனது முதல் பயணிகள் காரை உருவாக்குவதற்கும் 30 ஆண்டுகளுக்கு முன்பே இது நிகழ்ந்தது.
1952-லேயே இந்தியா தனது சொந்த காரைக் கொண்டு உலகளாவிய வாகன வரைபடத்தில் நுழைவதற்குக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு அது – முழுமையாக வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்டு, வணிகரீதியாகப் பெருமளவில் உற்பத்தி செய்யத் தயாராக இருந்த கார் அது.
 
ஆனால் இந்திய அரசு அதற்கு உரிமம் வழங்க மறுத்தது. 1950-களில் இந்தியாவில் இருந்த கடுமையான தொழில்துறை சட்டங்கள், (லைசென்ஸ் ராஜ்) ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே உற்பத்தி உரிமங்களை வழங்கின. இந்த முட்டுக்கட்டையான அரசு நடைமுறைகளால், ஜி.டி. நாயுடுவின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பான அந்த மலிவு விலை கார் அங்கீகரிக்கப்படாமலேயே போனது.
 
அதன்பின் அந்த கார் உற்பத்திக்கு செல்லவில்லை. மாதிரி வாகனம் ஒருபுறம் ஒதுக்கி வைக்கப்பட்டது. இந்த வரலாறு பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பாகவே,  மறைந்து போனது.
இந்தக் காட்சியை உங்கள் மனதில் நிறுத்தி கொள்ளுங்கள். ஒரு பக்கக் காட்சியில்: பொறியியல் துறைக்காக நாம் இன்றும் வியந்து பாராட்டும் ஜெர்மனி நாடு, கோயம்புத்தூரில் வடிவமைக்கப்பட்ட ஒரு சவரக்கத்தியைப் பாராட்டித் தீர்க்கிறது. அடுத்த பக்கக் காட்சியில்: புது தில்லி (இந்திய அரசு), கோயம்புத்தூரில் தயாரிக்கப்பட்ட ஒரு காருக்கு உற்பத்தி உரிமம் வழங்க மறுக்கிறது.
 
அவருக்குப் பாராட்டு மேடையை அமைத்துக் கொடுத்த நாடு அவருடைய சொந்த நாடு அல்ல. அவரைப் புறக்கணித்த நாடோ அவருடைய சொந்த நாடாக இருந்தது.
கடந்த எழுபது ஆண்டுகளாகத் தமிழ்நாடு இந்த வரலாற்றைச் சுமந்து கொண்டுதான் வருகிறது. ஆனால் மிக அரிதாகவே இதனைப் பற்றி பேசியிருக்கிறது. வரவிருக்கும் திரைப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டப்போகும் கதையும் இதுதான். இந்தத் தொடர் விவரித்துக் கொண்டிருக்கும் கதையும் இதுதான்.
 
மேலும், உலகம் இந்திய கண்டுபிடிப்பாளர்களை அங்கீகரிப்பதற்கு முன்பாகவே, இந்த நாடு அவர்களை அடையாளம் காண கற்றுக்கொள்வதற்கு இந்தக் கதையை இரண்டாவது முறை சொல்ல வேண்டிய தேவை இனி இருக்கக் கூடாது.