ஒரு ‘லெஜண்ட்’ உருவாகும் கதை: ஜி.டி.நாயுடுவாக மாறிய மாதவன்!
நிஜ மனிதர்களாக திரையில் தோன்றுவதில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிய நடிகர் மாதவன், ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட ஜி.டி.நாயுடுவாக நடிக்க எப்படி தயாரானார்?, இளம் வயது ஜி.டி.நாயுடுவாக நடித்துள்ள தீஜய் அருணாசலத்தின் தேர்வு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? என்பதை பார்ப்போம். ஒரு நிஜ மனிதரை திரையில் பிரதிபலிக்கும்போது, அவரது தோற்றத்தை அப்படியே கொண்டு வருவது மட்டும் போதாது என்று நம்பும் நடிகர்கள் சிலரே இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர்.மாதவன். நடிப்பு பயணத்தில் மற்றொரு மைல் கல் திரையில் தோன்றும் கதாபாத்திரம் உண்மையில் வாழ்ந்த ஒரு மனிதராக இருக்கும்போது, அந்த கதாபாத்திரத்தை வெறுமனே நடித்துக் காட்டாமல், முடிந்தவரை அந்த மனிதராகவே மாறவேண்டும் என்பதில் மாதவன் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், கோவை நகரின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தில் மாதவன் ஏற்றுள்ள கதாபாத்திரமும், அவரது நடிப்புப் பயணத்தில் மற்றொரு மைல் கல்லாக அமைந்துள்ளது. நம்பி நாராயணனாக மாறிய மாதவன் நிஜ வாழ்க்கை மனிதர்களை திரையில் பிரதிபலிப்பது மாதவனுக்கு புதிதல்ல. ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ திரைப்படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மாதவன் திரையில் கொண்டுவந்தார். இந்தப் படத்தில் அவர் நடிகராக மட்டுமின்றி, இயக்குநராகவும் பணியாற்றினார். 1994-ம் ஆண்டு உளவு பார்த்ததாக தவறாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை மற்றும் அவர் சந்தித்த போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவானது. இந்த கதாபாத்திரத்திற்காக மாதவன் மேற்கொண்ட மாற்றமும், கதாபாத்திரத்துக்குள் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட விதமும் பெரும் கவனத்தைப் பெற்றது. ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ திரைப்படம் 69-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் வென்றது. அஜித் தோவல் கதாபாத்திரத்திலும் மாற்றம் அதே அணுகுமுறையை ‘துரந்தர்’ திரைப்படத்திலும் மாதவன் வெளிப்படுத்தினார். ஆதித்யா தர் இயக்கிய இந்த ஆக்ஷன் திரைப்படத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பின்னணியை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மாதவன் நடித்தார். அந்த கதாபாத்திரத்துக்காக மொட்டைத் தலையுடன் தோன்றிய மாதவன், எளிமையான அரசு அதிகாரியின் தோற்றம், உடல் மொழி மற்றும் முகபாவனைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டுவந்திருந்தார். முதல் பார்வை புகைப்படங்கள் வெளியானபோதே, அவரது தோற்றம் மற்றும் உடல் மொழி உண்மையான அஜித் தோவலை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் குறிப்பிட்டனர். வெறும் தோற்ற மாற்றம் அல்ல! நிஜ வாழ்க்கை மனிதர்களை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்களை ஏற்கும்போது, மாதவனின் அணுகுமுறையில் ஒரு விஷயம் தொடர்ந்து காணப்படுகிறது. அது வெறும் தோற்ற ஒற்றுமை அல்ல. ஒரு கதாபாத்திரத்தின் குரல் எப்படி இருக்க வேண்டும், அவர் எப்படி நடப்பார், எப்படி அமர்வார், பேசுவதற்கு முன்பு எவ்வளவு நேரம் இடைவெளி விடுவார், வயது அதிகரிக்கும்போது அவரது உடல் மொழி எப்படி மாறும் என பல விஷயங்களையும் மாதவன் கவனத்தில் கொள்கிறார். ஒரு மனிதர் பல ஆண்டுகள் வாழ்ந்த அனுபவம் அவரது உடலில் எப்படி வெளிப்படும் என்பதையும் நடிப்பில் கொண்டுவர முயற்சிக்கிறார். அதனால், அவரது மாற்றங்கள் பெரும்பாலும் வெளிப்படையாக தன்னை அறிவித்துக் கொள்வதில்லை. மாறாக, சிறிய சிறிய உடல் மொழி மற்றும் நடிப்பு மாற்றங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு அந்த கதாபாத்திரம் இயல்பாக அறிமுகமாகிறது. ஜி.டி. நாயுடுவாக பல வயது தோற்றங்களில் மாதவன் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் மாதவனிடம் இதைவிட அதிகமான உழைப்பை எதிர்பார்க்கிறது. காரணம், இந்தப் படத்தில் அவர் ஒரு குறிப்பிட்ட வயதில் இருக்கும் ஜி.டி.நாயுடுவாக மட்டும் நடிக்கவில்லை. கோவையில் தனது கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்கிய இளம் ஜி.டி.நாயுடுவில் இருந்து, தொழில் உலகில் சாதனைகளைப் படைத்து, ‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்பட்ட முதிய ஜி.டி.நாயுடு வரையிலான பல்வேறு வயது நிலைகளில் அவர் தோன்றுகிறார். அடையாளம் காண முடியாத அளவுக்கு மாதவன் தோற்றம் படத்தின் டிரெய்லரில் வயதான ஜி.டி. நாயுடுவாக தோன்றும் மாதவனை அடையாளம் காண்பதே சற்று சிரமமாக இருக்கும் அளவுக்கு அவரது தோற்றத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு செயற்கை ஒப்பனை மற்றும் புரோஸ்தெடிக் தொழில்நுட்பம் உதவியிருந்தாலும், அந்த தோற்றத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது மாதவனின் உடல் மொழியும் நடிப்பும்தான். வயதான மனிதரின் சாய்ந்த உடல் அமைப்பு, குறைவான அசைவுகள், நிதானமான நடை, அமைதியான முகபாவனை என ஜி.டி.நாயுடுவின் வயதுக்கேற்ற தன்மைகளை மாதவன் தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார். ஆய்வுக்கு பின்னால் இருக்கும் உழைப்பு இப்படிப்பட்ட கதாபாத்திரத்திற்கான தயாரிப்பு என்பது கண்ணாடி முன் நின்று தோற்றத்தை மாற்றிக் கொள்வதுடன் முடிந்துவிடுவதில்லை. ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை, கோவையின் தொழில்துறை வளர்ச்சி, அவருடன் பணியாற்றியவர்களின் அனுபவங்கள், அவரது குறிப்புகள் மற்றும் அவரைச் சுற்றியுள்ள வரலாற்றுப் பதிவுகள் என பல்வேறு தகவல்களை ஆராய்ந்து கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. திரையில் இயல்பாகத் தெரியும் ஒவ்வொரு உடல் மொழிக்கும், பின்னால் நீண்ட ஆய்வு மற்றும் தயாரிப்பு இருக்கிறது. அந்த ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்களை நடிகர் உள்வாங்கிக்கொண்டு, கேமரா முன் நிற்கும்போது அதை ‘நடிப்பு’ என்று தெரியாத அளவுக்கு இயல்பாக வெளிப்படுத்துவதுதான் மிகப்பெரிய சவால். இளம் ஜி.டி.நாயுடுவாக தீஜய் அருணாசலம் ஆனால் ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் மற்றொரு முக்கியமான அம்சம், ஜி.டி.நாயுடுவின் இளமைப் பருவத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் தீஜய் அருணாசலம். ஜி.டி.நாயுடுவின் சிறுவயது மற்றும் இளமைக்கால வாழ்க்கையும் திரைப்படத்தில் இடம்பெறுகிறது. அந்தப் பகுதிகளில் இளம் ஜி.டி.நாயுடுவாக தீஜய் அருணாசலம் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்துக்கான அவரது தேர்வு திரைப்படத்தின் கதை சொல்லும் முறையில் முக்கியமானதாக அமைந்துள்ளது. இளம் வயது ஜி.டி.நாயுடுவின் தோற்றம் மற்றும் உடல் மொழியை நினைவூட்டும் வகையில் தீஜயின் திரைத் தோற்றம் அமைந்துள்ளது. இதனால், கதையின் ஒரு கட்டத்தில் தீஜயிடம் இருந்து மாதவனிடம் கதாபாத்திரம் மாறும்போது, ‘வேறு ஒரு நடிகர் வந்துவிட்டார்’ என்ற உணர்வு ஏற்படாமல், அதே மனிதர் வயதாகி வருவதைப் போன்ற தொடர்ச்சியை உருவாக்க முடிகிறது. ஏன் இந்த அளவிலான கவனம் முக்கியம்? ஒரு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் வெற்றி பெறுவதில், பார்வையாளர்கள் திரையில் பார்க்கும் மனிதரை உண்மையான வரலாற்று நபராக நம்புகிறார்களா என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த நம்பிக்கை ஒரே ஒரு காட்சியால் உருவாகிவிடாது. ஒரு நடிகர் எப்படி நிற்கிறார், எப்படி நடக்கிறார், பேசுவதற்கு முன்பு எப்படி இடைவெளி விடுகிறார், முகபாவனைகளை எப்படி வெளிப்படுத்துகிறார், வயது அதிகரிக்கும்போது உடல் மொழியை எப்படி மாற்றுகிறார் என நூற்றுக்கணக்கான சிறிய முடிவுகளின் மூலமே அது உருவாகிறது. சவால் நிறைந்த கதாபாரத்திரம் இரண்டு மணி நேரத்திற்கும் சற்று அதிகமான திரைப்படத்தில் பல தசாப்தங்களைக் கடந்து செல்லும் ஒரு மனிதரின் வாழ்க்கையை நம்பும்படியாகக் காட்டுவது மிகப்பெரிய சவால். நம்பி நாராயணன் முதல் அஜித் தோவலை நினைவூட்டும் கதாபாத்திரம் வரை நிஜ மனிதர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ள மாதவனுக்கு, ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ஜி.டி.நாயுடு கதாபாத்திரம் கடும் சவாலாகவே அமைந்துள்ளது. திரையில் உயிரோட்டமாக மாறும் இளம் வயது ஜி.டி.நாயுடுவாக தீஜய் அருணாசலத்தின் நடிப்பும், பின்னர் அதே கதாபாத்திரத்தின் வயதான தோற்றத்தில் மாதவனின் மாற்றமும் ஒன்றோடொன்று இணையும் விதத்தில் அமைந்தால், ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் திரையில் இன்னும் உயிரோட்டமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை திரையில் கொண்டு வரும் முயற்சியில், அவரைப் பற்றிய கதை மட்டுமல்ல; அந்த மனிதராக மாறுவதற்காக ஒரு நடிகர் மேற்கொண்ட பயணமும் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு கதையாகவே உள்ளது.
நிஜ மனிதர்களாக திரையில் தோன்றுவதில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிய நடிகர் மாதவன், ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட ஜி.டி.நாயுடுவாக நடிக்க எப்படி தயாரானார்?, இளம் வயது ஜி.டி.நாயுடுவாக நடித்துள்ள தீஜய் அருணாசலத்தின் தேர்வு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? என்பதை பார்ப்போம்.
ஒரு நிஜ மனிதரை திரையில் பிரதிபலிக்கும்போது, அவரது தோற்றத்தை அப்படியே கொண்டு வருவது மட்டும் போதாது என்று நம்பும் நடிகர்கள் சிலரே இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர்.மாதவன்.
நடிப்பு பயணத்தில் மற்றொரு மைல் கல்
திரையில் தோன்றும் கதாபாத்திரம் உண்மையில் வாழ்ந்த ஒரு மனிதராக இருக்கும்போது, அந்த கதாபாத்திரத்தை வெறுமனே நடித்துக் காட்டாமல், முடிந்தவரை அந்த மனிதராகவே மாறவேண்டும் என்பதில் மாதவன் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், கோவை நகரின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தில் மாதவன் ஏற்றுள்ள கதாபாத்திரமும், அவரது நடிப்புப் பயணத்தில் மற்றொரு மைல் கல்லாக அமைந்துள்ளது.
நம்பி நாராயணனாக மாறிய மாதவன்
நிஜ வாழ்க்கை மனிதர்களை திரையில் பிரதிபலிப்பது மாதவனுக்கு புதிதல்ல. ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ திரைப்படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மாதவன் திரையில் கொண்டுவந்தார். இந்தப் படத்தில் அவர் நடிகராக மட்டுமின்றி, இயக்குநராகவும் பணியாற்றினார்.
1994-ம் ஆண்டு உளவு பார்த்ததாக தவறாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை மற்றும் அவர் சந்தித்த போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவானது.
இந்த கதாபாத்திரத்திற்காக மாதவன் மேற்கொண்ட மாற்றமும், கதாபாத்திரத்துக்குள் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட விதமும் பெரும் கவனத்தைப் பெற்றது. ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ திரைப்படம் 69-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் வென்றது.
அஜித் தோவல் கதாபாத்திரத்திலும் மாற்றம்
அதே அணுகுமுறையை ‘துரந்தர்’ திரைப்படத்திலும் மாதவன் வெளிப்படுத்தினார். ஆதித்யா தர் இயக்கிய இந்த ஆக்ஷன் திரைப்படத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பின்னணியை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மாதவன் நடித்தார்.
அந்த கதாபாத்திரத்துக்காக மொட்டைத் தலையுடன் தோன்றிய மாதவன், எளிமையான அரசு அதிகாரியின் தோற்றம், உடல் மொழி மற்றும் முகபாவனைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டுவந்திருந்தார்.
முதல் பார்வை புகைப்படங்கள் வெளியானபோதே, அவரது தோற்றம் மற்றும் உடல் மொழி உண்மையான அஜித் தோவலை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.
வெறும் தோற்ற மாற்றம் அல்ல!
நிஜ வாழ்க்கை மனிதர்களை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்களை ஏற்கும்போது, மாதவனின் அணுகுமுறையில் ஒரு விஷயம் தொடர்ந்து காணப்படுகிறது. அது வெறும் தோற்ற ஒற்றுமை அல்ல. ஒரு கதாபாத்திரத்தின் குரல் எப்படி இருக்க வேண்டும், அவர் எப்படி நடப்பார், எப்படி அமர்வார், பேசுவதற்கு முன்பு எவ்வளவு நேரம் இடைவெளி விடுவார், வயது அதிகரிக்கும்போது அவரது உடல் மொழி எப்படி மாறும் என பல விஷயங்களையும் மாதவன் கவனத்தில் கொள்கிறார்.
ஒரு மனிதர் பல ஆண்டுகள் வாழ்ந்த அனுபவம் அவரது உடலில் எப்படி வெளிப்படும் என்பதையும் நடிப்பில் கொண்டுவர முயற்சிக்கிறார். அதனால், அவரது மாற்றங்கள் பெரும்பாலும் வெளிப்படையாக தன்னை அறிவித்துக் கொள்வதில்லை. மாறாக, சிறிய சிறிய உடல் மொழி மற்றும் நடிப்பு மாற்றங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு அந்த கதாபாத்திரம் இயல்பாக அறிமுகமாகிறது.
ஜி.டி. நாயுடுவாக பல வயது தோற்றங்களில் மாதவன்
‘ஜி.டி.என்.’ திரைப்படம் மாதவனிடம் இதைவிட அதிகமான உழைப்பை எதிர்பார்க்கிறது. காரணம், இந்தப் படத்தில் அவர் ஒரு குறிப்பிட்ட வயதில் இருக்கும் ஜி.டி.நாயுடுவாக மட்டும் நடிக்கவில்லை.
கோவையில் தனது கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்கிய இளம் ஜி.டி.நாயுடுவில் இருந்து, தொழில் உலகில் சாதனைகளைப் படைத்து, ‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்பட்ட முதிய ஜி.டி.நாயுடு வரையிலான பல்வேறு வயது நிலைகளில் அவர் தோன்றுகிறார்.
அடையாளம் காண முடியாத அளவுக்கு மாதவன் தோற்றம்
படத்தின் டிரெய்லரில் வயதான ஜி.டி. நாயுடுவாக தோன்றும் மாதவனை அடையாளம் காண்பதே சற்று சிரமமாக இருக்கும் அளவுக்கு அவரது தோற்றத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு செயற்கை ஒப்பனை மற்றும் புரோஸ்தெடிக் தொழில்நுட்பம் உதவியிருந்தாலும், அந்த தோற்றத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது மாதவனின் உடல் மொழியும் நடிப்பும்தான்.
வயதான மனிதரின் சாய்ந்த உடல் அமைப்பு, குறைவான அசைவுகள், நிதானமான நடை, அமைதியான முகபாவனை என ஜி.டி.நாயுடுவின் வயதுக்கேற்ற தன்மைகளை மாதவன் தனது நடிப்பில் கொண்டு வந்துள்ளார்.
ஆய்வுக்கு பின்னால் இருக்கும் உழைப்பு
இப்படிப்பட்ட கதாபாத்திரத்திற்கான தயாரிப்பு என்பது கண்ணாடி முன் நின்று தோற்றத்தை மாற்றிக் கொள்வதுடன் முடிந்துவிடுவதில்லை. ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை, கோவையின் தொழில்துறை வளர்ச்சி, அவருடன் பணியாற்றியவர்களின் அனுபவங்கள், அவரது குறிப்புகள் மற்றும் அவரைச் சுற்றியுள்ள வரலாற்றுப் பதிவுகள் என பல்வேறு தகவல்களை ஆராய்ந்து கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது.
திரையில் இயல்பாகத் தெரியும் ஒவ்வொரு உடல் மொழிக்கும், பின்னால் நீண்ட ஆய்வு மற்றும் தயாரிப்பு இருக்கிறது. அந்த ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்களை நடிகர் உள்வாங்கிக்கொண்டு, கேமரா முன் நிற்கும்போது அதை ‘நடிப்பு’ என்று தெரியாத அளவுக்கு இயல்பாக வெளிப்படுத்துவதுதான் மிகப்பெரிய சவால்.
இளம் ஜி.டி.நாயுடுவாக தீஜய் அருணாசலம்
ஆனால் ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் மற்றொரு முக்கியமான அம்சம், ஜி.டி.நாயுடுவின் இளமைப் பருவத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் தீஜய் அருணாசலம். ஜி.டி.நாயுடுவின் சிறுவயது மற்றும் இளமைக்கால வாழ்க்கையும் திரைப்படத்தில் இடம்பெறுகிறது. அந்தப் பகுதிகளில் இளம் ஜி.டி.நாயுடுவாக தீஜய் அருணாசலம் நடித்துள்ளார்.
இந்த கதாபாத்திரத்துக்கான அவரது தேர்வு திரைப்படத்தின் கதை சொல்லும் முறையில் முக்கியமானதாக அமைந்துள்ளது. இளம் வயது ஜி.டி.நாயுடுவின் தோற்றம் மற்றும் உடல் மொழியை நினைவூட்டும் வகையில் தீஜயின் திரைத் தோற்றம் அமைந்துள்ளது.
இதனால், கதையின் ஒரு கட்டத்தில் தீஜயிடம் இருந்து மாதவனிடம் கதாபாத்திரம் மாறும்போது, ‘வேறு ஒரு நடிகர் வந்துவிட்டார்’ என்ற உணர்வு ஏற்படாமல், அதே மனிதர் வயதாகி வருவதைப் போன்ற தொடர்ச்சியை உருவாக்க முடிகிறது.
ஏன் இந்த அளவிலான கவனம் முக்கியம்?
ஒரு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் வெற்றி பெறுவதில், பார்வையாளர்கள் திரையில் பார்க்கும் மனிதரை உண்மையான வரலாற்று நபராக நம்புகிறார்களா என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த நம்பிக்கை ஒரே ஒரு காட்சியால் உருவாகிவிடாது.
ஒரு நடிகர் எப்படி நிற்கிறார், எப்படி நடக்கிறார், பேசுவதற்கு முன்பு எப்படி இடைவெளி விடுகிறார், முகபாவனைகளை எப்படி வெளிப்படுத்துகிறார், வயது அதிகரிக்கும்போது உடல் மொழியை எப்படி மாற்றுகிறார் என நூற்றுக்கணக்கான சிறிய முடிவுகளின் மூலமே அது உருவாகிறது.
சவால் நிறைந்த கதாபாரத்திரம்
இரண்டு மணி நேரத்திற்கும் சற்று அதிகமான திரைப்படத்தில் பல தசாப்தங்களைக் கடந்து செல்லும் ஒரு மனிதரின் வாழ்க்கையை நம்பும்படியாகக் காட்டுவது மிகப்பெரிய சவால்.
நம்பி நாராயணன் முதல் அஜித் தோவலை நினைவூட்டும் கதாபாத்திரம் வரை நிஜ மனிதர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான அணுகுமுறையை வெளிப்படுத்தியுள்ள மாதவனுக்கு, ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ஜி.டி.நாயுடு கதாபாத்திரம் கடும் சவாலாகவே அமைந்துள்ளது.
திரையில் உயிரோட்டமாக மாறும்
இளம் வயது ஜி.டி.நாயுடுவாக தீஜய் அருணாசலத்தின் நடிப்பும், பின்னர் அதே கதாபாத்திரத்தின் வயதான தோற்றத்தில் மாதவனின் மாற்றமும் ஒன்றோடொன்று இணையும் விதத்தில் அமைந்தால், ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் திரையில் இன்னும் உயிரோட்டமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை திரையில் கொண்டு வரும் முயற்சியில், அவரைப் பற்றிய கதை மட்டுமல்ல; அந்த மனிதராக மாறுவதற்காக ஒரு நடிகர் மேற்கொண்ட பயணமும் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு கதையாகவே உள்ளது.